Sunday 5 February 2017

பெண்ணே நீ விழித்தெழு
இருளைக் கிழித்தெழு
அறியாமையைத் தகர்த்தெழு
அறிவியலை இழுத்தெழு
கண்ணீர் அருவிகள்
தொலைத்தெழு.......

அடிமைத் தனத்தை உடைத்தெழு
அன்பிற்கு அடி பணிந்திடு.. வம்பிற்குத் தலை நிமிர்ந்தெழு.......

தலைக் கனத்தை கைவிட்டு
நம்பிக்கையை கையில் எடுத்து
உயர்ந்த இடத்தில் நிலைத்து நில்.....

அதட்டல் மிரட்டல் உருட்டல் எல்லாம்
புரட்டிப் போட்டு படிப் படியாக படிப்பில்
உயர்ந்து நில் .......

ஏற்ற தாழ்வுகளையும் முரண்பாடுகளையும்
மடக்கி கசக்கி சுறுட்டிப் போட்டு மகளிராலும்
முடியும் என்று நிரூபித்து விடு நல்ல
செயலில்...............

நன்மைக்குத் தன்னடக்கம், நாவடக்கம் இவற்றைத்
துணையாக எடு ....
தீமைக்குச் சுட்டெரிக்கும் விழி கொண்டு
வெகுண்டு எழு ...........

மனையாள மட்டுமே மனையாள்
என்ற தவறான கறையை கரம்
பிடித்தவன் நெஞ்சில் இருந்து
துடைத்து தூக்கிப் போடு........

அன்பாலும் ஆதரவாலும் எடுத்துக் கூறி
வளைத்துப் பிடி உன் பிடியில் கணவனை
மடி கொடுக்க மட்டும் துணைவி இல்லை
பிடி கொடுக்கவும் என்று புரியவை.........

புன்னகையில் பெண் ஒரு மலர்
தென்றலாகும் போது ஒரு மங்கை
கொன்றலாக தடவும் போது அவள்
ஒரு நல்ல துணைவி பொறுமை
இழந்தால் புயலாக மாறும் கண்ணகி என
உணர வை ஆண் ஆதிக்கம் கொண்ட
சிலருக்கு..............

ஆணும் பெண்ணும் ஓர் உயிரே
பிறப்பும் இறப்பும் ஒன்றே என்று
உணரவை ஆனால் ஆணவத்தில்
ஆட்டம் போடாதே பெண்ணே
அதைஉன் உள்ளத்தில் இருந்து
தூக்கிப் போடு கண்ணே...........

பாரதி கண்ட கனவு கலையாமல்
சிலையாகாமல் உயிர்த்தெழ வேண்டுமாயின்
நீ பாரதிப் பெண்ணாக விழித்தெழ
வேண்டும்.....  இப்படிக்கு உங்களில் ஒருவன் த.சண்முகராஜ்

Friday 20 January 2017

🙏 போராட்டகள இளைஞர்களுக்கு ஓர் ஆசிரியனின் சமர்பனம்🙏

ஏனென்று தெரியவில்லை,
மனதிற்கு தலைகால் புரியவில்லை!!

வாழ்த்தலாம் என்று வந்துவிட்டேன்...
வார்த்தைகள் மட்டும்
சிக்கவில்லை!!
இருந்தாலும் முயற்சிக்கிறேன்🙂

முகநூலில் புதைந்து
மூழ்கித்தான் போவானோ..
என நினைத்தேன் இளைஞர்களை...😒

அந்நூலில் தான் அவர்கள்
அணியணியாய் திரன்டனர்,
வீரம்,தன்மானம் எனும்
தமிழ்முகவரியை மீட்டனர்.

யார்சொல்லி வந்தீர்கள்?
யாதுமாகி நின்றீரே💪🏻

விவேகானந்தனின் விதைகளோ🤔
"சனவரி 12ல் ஆரம்பித்தீர்🙏

பாரதியின் வரிகளோ🤔
" தீயாய் பற்றிக்கொண்டீர்🙏

வள்ளுவனின் திருக்குறளோ!
அன்பினால் அதிகாரம் செய்கிறீர்🙏

 புதுக்கவிதையோ🤔
" வாடிவாசல் திறக்கும்வரை
வீடுவாசல் செல்லமாட்டோமென"
தினறடிக்கிறீற்களே💪🏻

ஒருவேளை ஐய்க்கூ வா🤔
எங்கிருந்து புறப்பட்டீரென
காவல்துறையே கலங்கியதாமே💪🏻

தறிகெட்டுபோவானோ என்றிருந்த உம் பெற்றோரெல்லாம்,
தவமிருந்து பெற்றோமோ! என தன்னிறைந்து போயுள்ளனர்🙏

தமிழக தாய்களுக்கெல்லாம்
செல்லபிள்ளையாய் மாறிநீர்.

வாழ்த்தாத வாயுண்டா உங்களை,👏🏻
மகிழ்சியில் மலராத
மனமுண்டா👏🏻

சிறுபிள்ளையாய் ஆரம்பித்தீரோ🤔,இல்லை
சிந்தை தெளிந்து ஆரம்பித்தீரோ🤔
தெரியவில்லை. ஆனால்...
நீங்கள் செய்வது ஓர்...
"சுதந்திர போராட்டம்!!
இனம் மீட்கும் புரட்சி💪🏻.

வெல்லட்டும் உம் போராட்டம்!
மீளட்டும் நம் இனம்🙏

உடல் இனையாவிட்டாலும்,
என் இதயம் இனைந்திருக்க...
 
முதன்முறையாக
    பெருமையுடனும்,
        கர்வத்துடனும்,
       
சொல்கிறேன்......

" *நான் இந்த தலைமுறை இளைஞனின் ஆசிரியன்*💪🏻"